புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும்
மீண்டும் ஒரு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கூடாது என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கினங்க பதவி உயர்வு ஒரே சமயத்தில் வழங்க இயலுமா என இயக்குநர் அவர்கள் கேட்டார்கள். அவ்வாறு நடந்தால் தமிழக அரசுக்கும் நமது துறைக்கும் பலரின் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு. தாங்கள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரை கலந்து கொண்டு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் என நேற்று தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டார். உறுதியாக வாய்பினை ஏற்படுத்தித் தருவதாக இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி