ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை (18ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளி ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக்கண்டித்து கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி மாவட்ட கல்விஅலுவலக வளாகம் முன் நாளை (18ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆசிரியர்கள் மீதான தொடர் வன்முறை தாக்குதல்களை கண்டித்தும், ஆசிரியர்கள் தங்கள் பணியினை சுதந்திரமாகவும், மன நிறைவுடன் செய்ய உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், கல்வி விதி எண் 51ல் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அரசை வலியுறுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டமாகும். இதில், அனைத்து ஆசிரியர்களும்பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி