"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'


ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைஉடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே, தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதுடன், உடனடியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.

26 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    இன்றைய 27.12.14 (சனிக்கிழமை)
    தினத்தந்தி பதிப்பில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு தொல் . திருமாவளவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்

    ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மட்டும் இன்னும் ஆசிரியர் நியமனம் நடைபெறதது மிகவும் கண்டத்திற்கு உரியது என்றும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்

    தலைவர் திரு தொல். திருமாவளவனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

    மேலும் இனி எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டன அறிக்கை விடுவார்கள்
    நமது பிரச்னையை பெரிய பிரச்சனை ஆக்குவார்கள் என்று தமிழக அரசிற்கு நன்கு தெரியும்
    எனவே ஜனவரி முதல் வாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Hello sir naan tet LA 89 mark LA pass panniirukean cut off LA varala nanum sc samugatha sarndhavan than ungakuda peasanum pola iruku Pls send your phone number my email I'd raj.kuppuraj15@gmail.com

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி கல்வி செய்தி ADMIN Sir இந்த தகவலை
    தங்களது வலை தளத்தில் பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  3. நமது வேண்டுகோளை ஏற்று கண்டன அறிக்கை கொடுத்த விடுதலை சிறுத்தை தலைவர் தொல் . திருமாவளவன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  4. ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தி வருகிறது. ஆசிரியர்களை நியமனம் செய்யும் நடைமுறையில் தமிழக அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறை வெளிப்படுகிறது.

    குறிப்பாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 100 விழுக்காடு ஆசிரியர் நியமனங்களை நிறைவேற்றியிருக்கிற அரசு, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் ஆதி திராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

    தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஓவியம், இசை, கைத்தறி போன்ற துறைகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ரூ.5,000-க்கு மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    ReplyDelete
  5. எங்களுக்காக குரல் கொடுக்கும் திரு. திருமாவளவன் ஐயா அவர்களுக்கு் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இந்த செய்தியை வெளியிட்ட கல்வி செய்திக்கு நன்றி

    ReplyDelete
  6. ok wait and get friends

    ReplyDelete
  7. அகிலன் அவர்களுக்கு வணக்கம்.நான் செல்வராஜ்....தேனி...எத்தனை மதிப்பெண் எடுத்தால் இடைநிலை ஆசிரிய்ர் பணி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது???

    ReplyDelete
  8. PG welfare. வேலைகள் Trb யில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    விரைவில் கலந்தாய்வு அறிவிப்பு வரும்.
    வரும் 10ம் தேதி PG exam வேலை நடைபெறுவதால்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Vijay sir pg second list tamil major ku mattum illaiya...yen tamil ku second list varala?pls rp me sir...

      Delete
    2. விஜய் சார்,
      இறுதி பட்டியல் வெளியிட்டாமல் எப்படி கலந்தாய்வு நடைபெறும்?

      இந்த ஒரு வாரத்திற்குள் இறுதி பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளதா.

      Delete
    3. Dear malar vizhi.

      கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் தமிழுக்கு மட்டும் வரவில்லை.

      Delete
    4. இறுதி பட்டியலுக்கான வேலைதான் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

      Delete
    5. Thank u for ur information vijay sir.. case mudunja poduvangala...

      Delete
    6. Vijaya kumar sir how did u got this information? Helpline always saying that is " under process" .

      Delete
  9. thank u sir..............thank u so much

    ReplyDelete
  10. Ithai ponru matra ethirkatchi thalaivarkalum arikkai kodukkaseiyukal nanbarkale

    ReplyDelete
  11. thank u thol thiruma and kalviseithi

    ReplyDelete
  12. What abtPg. Welfare liat Vijay Sir

    ...???

    ReplyDelete
  13. As vijaya kumar chennai sir said!!! Last. Month there was no chance given for absentees. Of PG second list of welfare schools, . .. kindly update that vijay sir or anybody knows true information ....

    ReplyDelete
  14. Waiting for pg welfare list.... update...

    ReplyDelete
  15. But as per procedure before pg TRB examination they have to release the old pg trb selection list. So we can expect before jan09.

    ReplyDelete
  16. Kindly give regular update regarding PG welfare list........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி