கும்பகோணம் பள்ளி விபத்து வழக்கில்தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

கும்பகோணம் பள்ளி விபத்து வழக்கில்தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ்கோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க, ஐகோர்ட் மறுத்து விட்டது.
கும்பகோணம், கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16ம் தேதி, ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகி பலியாயினர்; 18 பேர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில், பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு, ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன் உட்பட, எட்டு பேருக்கு, தலா, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து,தஞ்சாவூர் கோர்ட உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கில், மாவட்ட துவக்கக் கல்வி முன்னாள் அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட, 11 பேரை, கீழ்கோர்ட் விடுதலை செய்தது. இதை எதிர்த்து, அரசு தரப்பில், மதுரை ஐகோர்ட் கிளையில், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை, நீதிபதிகள் ஏ.செல்வம், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, கீழ்கோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் கோரினர்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக, இறுதி விசாரணையை, வரும் பிப்., 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி