கடந்த, 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்ட, குரூப் --2 பணிகளுக்கான, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 24ம் தேதியில் இருந்து துவங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு அடிப்படையில், குரூப் - 2 பதவிகளுக்கு, நேரடி நியமனத்திற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., 2012 நவம்பரில் தேர்வு நடத்தியது.இணையதளத்தில் இதில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு, இதுவரை, நான்கு கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. மீதமுள்ள, 120 காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட, 354 விண்ணப்பதாரர் பதிவெண் அடங்கிய பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.இதில், சிறப்பு பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு, 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 26ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. மற்றவர்களுக்கு, 26ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 27ம் தேதிகலந்தாய்வு நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை, தனித்தனியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.பட்டியலில் இடம் பெற்றவர்கள், குறிப்பிட்ட நாட்களில், எண்.3, பிரேசர் பால சாலை, சென்னை - -3ல் உள்ள, தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி