அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்


சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், தொழிலாளர்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான கூட்டம், வரும் 10ம் தேதி, காலை 10 மணி முதல் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர்கள் தங்களுடைய பெயர், கணக்கு எண், பி.எப். எண் மற்றும் அவர்களுடைய குறைகளை மக்கள் தொடர்பு அதிகாரியிடம்இந்த மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி