தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2015

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு


தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து51 சொட்டு மருந்து முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும், இரண்டு தவணைகளாக சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் தவணையாக வரும் 18 ஆம் தேதியும், இரண்டாம் தவணையாக அடுத்த மாதம் 22 ஆம் தேதியும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி