திருவள்ளூரில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவள்ளூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், பெரியகுப்பத்தில் நேற்று நடந்தது.
மாவட்டத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உதயகுமார் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், மாநில மகளிரணி தலைவி செல்வகுமாரி கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில், தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு தனித்தனி ஊதியங்கள் வழங்க வேண்டும்; தேர்வுப் பணி, விடைத்தாள் திருத்தும் பணிக்கான உழைப்பூதியம், படிகளை மூன்று மடங்காக உயர்த்தித் தர வேண்டும்; வருமான வரி உச்சவரம்பை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி