பள்ளிகளில் மாணவர்களுக்கு அடைவுத் திறனறி தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2015

பள்ளிகளில் மாணவர்களுக்கு அடைவுத் திறனறி தேர்வு.


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குள்பட்ட 10 பள்ளிகளில் அடைவுத் திறனறி தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறுபயிற்சிகளை அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் கற்றலில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை சோதித்து அறிய, சொல்வதை எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தலில் தேர்வு நடைபெறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 10 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தமிழ் மற்றும் கணிதத் தேர்வு நடைபெற்றது. புதன்கிழமை ஆங்கிலத் தேர்வு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து 8-ம் வகுப்பிற்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ்,ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் அடைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் பள்ளிகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மாடசாமி பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி