வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2015

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
வன அலுவலர், கள உதவியாளர் உள்ளிட்ட 181 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

வேளாண்மை,கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், தோட்டக்கலை, கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 17 பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் இந்தத்தேர்வை எழுதலாம்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புநடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தப் பயிற்சி வகுப்புநடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்கான ஆதாரம், ஒரு புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 2-ம் தேதிக்குள்பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி