தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2015

தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை


அரசுத் துறைகளில் உள்ள ஊர்தி ஓட்டுநர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர அரசுத் துறை ஓட்டுநர் பணியிடங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தமுறையில் விடும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

மேலும் ஓட்டுநர் பணியிடங்களை முன்பு இருந்ததுபோல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ. 4 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 5,500 ஆகிய ஊதிய நிலை ஓட்டுநர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 23-ல் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் தலைவர் டி. ஜெயக்கொடி, துணைத் தலைவர் ஏ.எம். முகமதுகெளஸ் உள்ளிட்டோர் பேசினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி