தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2015

தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2014-15 ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் படி100 அரசு உ யர்நிவைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.அதில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாத ஊதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், இப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் சென்று கேட்டால் முறையான தகவல் தெரிவிக்கவும் மறுத்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரா.வேல்முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டன.அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கான அரசு ஆணை 148ல் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு ஆணையை வைத்து மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள்ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் ஊதியம் பெற முடியாத நிலையிருக்கிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் முறையிட்டோம். அவரும் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.ஆனால் இதுவரையில் கல்வித்துறையிடம் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என காரணம் கூறி கருவூலத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றார். இது குறித்து கருவூலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பள்ளிகள் தரம் உயர்ததப்படும் போது பணியிடங்களக்கான மொத்த செவினத்திற்கான கருத்துரு பள்ளிக் கல்வி துறையிடம் இருந்து நித்துறை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.அதற்கான ஆணை இன்னும் பெறப்படப்பல்லையென்றும்,இதனால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாத நிலை நிலவுவதாக கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி