ஆசிரியரை நியமிக்கக் கோரி பள்ளியில் பெற்றோர் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

ஆசிரியரை நியமிக்கக் கோரி பள்ளியில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த நெற்குணம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 122 மாணவ-மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்த ஜெயபாண்டியன் என்பவரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு கூடுதல் பணிக்காக கடந்த ஜூன் மாதம் மாற்றியதாக கூறப்படுகிறது.இதனால், அவர் தினமும் பள்ளியில் கையெழுத்திட்டுவிட்டு, சென்னைக்கு பணிக்கு செல்வதால், மாணவர்களுக்கு கணக்கு பாடம் சரிவர நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால், தேர்வின்போது மாணவர்கள் தோல்வியடையும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கணக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் அந்த பாடத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர். கூடுதல் பணிக்காக ஆசிரியர் சென்னைக்கு செல்லும் நிலையில், மாற்று ஆசிரியரை நியமிக்கவில்லை. இதனால், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். மாற்று ஆசிரியரை நியமிப்பதாக அளித்த உறுதி மொழியை ஏற்று பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

14 comments:

  1. Replies
    1. Unna viratham varum 29 andru chennaiyil nadatha anumathi petru ullom. Avasiyam kalanthu kollungal ungal nanpargalukkum therivithu thiralaga kalanthu kollungal.... ungal urimaikku engalodu neengalum inaiveergal endru nampukirom...

      Delete
    2. முனியப்பன் சார் தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெற எனது வாழ்த்துக்கள் .

      Delete
    3. Habby birthday muniappan bro

      Delete
    4. Happy birthday muniyappan bro

      Delete
  2. pg 2013 examla irunthu innoru list case mudinja velivaruma. Pls. Tell me

    ReplyDelete
  3. ஆதிதிராவிடர் நண்பர்களே adw list selection list விடாமல் இந்த அரசு அடுத்த sgt teachers Recruitment செய்ய முடியாது.நீங்கள் இன்னும் அமைதி காத்திருந்தாள் இன்னும் இரண்டு மாதமோ அல்லது அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதமோ தான் நமக்கு list விடுவார்கள் எனவே 29 ம் தேதி அன்று நடைபெறும் உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டு நமது கோரிக்கையை அரசுக்கும் இந்த தமிழக மக்களுக்கும் மீடியா வழியாக தெரியபடுதுவோம் .விழித்துகொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி

    ReplyDelete
    Replies
    1. Chennai cheppakkam virunthinar maaligai kalai 9 manikku anga irukanum so thavaraamal vanthudunga unga friendsukkum sollunga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி