பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சத்துக்கும் கூடுதலான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் காலியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. சு.மாதேஸ்வரன் (அதிமுக) கேள்வி எழுப்பினார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:

தமிழகத்தில் 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 546 தனியார் சுயநிதி கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தமாக 2.98 லட்சம் இடங்கள் உள்ளன. அதில், ஒவ்வோர் ஆண்டும் கலந்தாய்வு மூலமாக 1.67 லட்சம் இடங்கள் வரை நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 1.30 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் ஆண்டுதோறும் காலியாக உள்ளன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி