தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2015

தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம்

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின், தொழில்நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள், பிப்., 14ம் தேதி துவங்குகிறது. அன்று, சுருக்கெழுத்து தமிழ் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வும், 15ம் தேதி சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும், 21ம் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வு 4 அணிகளாகவும், 22ம் தேதி இளநிலை தேர்வின் 5 வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகள் 3 அணிகளாவும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர் (ஹை ஸ்பீடு) வேகத்தேர்வும் நடக்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரியிலும் அரசு தட்டச்சு பாடத் தேர்வுகள் 96 தேர்வு மையங்களில் நடக்கிறது.


புதுச்சேரியில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியிலும், கடலுார் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக், சிதம்பரத்தில் முத்தையா பாலிடெக்னிக், நெய்வேலியில் விவேகானந்தா பாலிடெக்னிக், விருத்தாசலத்தில் அரசு செராமிக் கல்லுாரி ஆகிய 4 மையங்களிலும், விழுப்புரத்தில் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி, திண்டிவனத்தில் பி.வி.பாலிடெக்னிக் கல்லுாரியிலும் தேர்வுகள் நடக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி