பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலக்கோட்டில் வரும் 25-ஆம் தேதி அருள்மிகு புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் பாலக்கோடு வட்டம், நகரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று பாலக்கோடு சார்நிலைக் கருவூல அலுவலகம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி