பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2015

பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்


பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்குஉயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த ஆசிரியர் பயிற்சியை 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய கல்வியியல் கல்வி கவுன்சில்(என்சிடிஇ) அறிவித்தது. தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கூட்டமைப்பு மத்திய அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், 2016-17ம் கல்வியாண்டில், இந்த 2 ஆண்டு படிப்பை தொடங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இதற்கான கால அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி