பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது


பிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.
இதையொட்டி அந்த வினாத்தாள் கட்டுகளை பத்திரமாக வைக்க டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து இயக்குனர்களும், அனைத்து இணை இயக்குனர்களும் மாவட்டங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு அந்த பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது.இதையொட்டி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் வினாத்தாள் கட்டுகளை பத்திரமாக வைக்கவும், அந்த மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்வார்கள். பின்னர் அவர்கள் தேர்வு நடைபெற உள்ள மையங்களை ஆய்வு செய்வார்கள். தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னை வந்த பின்னர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வினாத்தாள் மையங்களை கண்காணிப்பார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி