அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த தாற்காலிக பணியாளர்களுக்கு, அதன் நிர்வாக இயக்குநர் டி. ஆல்பர்ட் தினகரன் பணி நிரந்தர ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 26 மண்டலங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் தாற்காலிகமாகப் பணியாற்றி வந்த 4,100 பேருக்கு அந்தந்த நிர்வாக இயக்குநர்களால் பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய 1,572 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 161 பேரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த 751 பேரும், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த 358 பேரும், கோவைக் கோட்டத்தைச் சேர்ந்த 413 பேரும், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த 468 பேரும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 182 பேரும், திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த 195 பேரும் பயனடைந்தனர்.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த தாற்காலிக பணியாளர்களுக்கு, அதன் நிர்வாக இயக்குநர் டி. ஆல்பர்ட் தினகரன் பணி நிரந்தர ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 26 மண்டலங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் தாற்காலிகமாகப் பணியாற்றி வந்த 4,100 பேருக்கு அந்தந்த நிர்வாக இயக்குநர்களால் பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய 1,572 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 161 பேரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த 751 பேரும், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த 358 பேரும், கோவைக் கோட்டத்தைச் சேர்ந்த 413 பேரும், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த 468 பேரும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 182 பேரும், திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த 195 பேரும் பயனடைந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி