மார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு: சென்னையில் 53 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2015

மார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு: சென்னையில் 53 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 747 மாணவிகளும் எழுதவுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 27 ஆயிரத்து 835 மாணவர்களும், 29 ஆயிரத்து 524 மாணவிகளும் எழுதுகின்றனர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 19-ஆம் தேதியும் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி