மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச்8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்தன. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சு நடத்த தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். ஆனால், முதல்வரைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி மார்ச் 8-இல் போராட்டம்நடத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி