பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்


பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியத் தேர்வுத் துறைத் தலைவர் டி.விஜயலட்சுமி நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
13 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சு, எழுதுதல், படித்தல், கவனித்தல் ஆகிய திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் "ஆப்டிஸ்' தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 1/2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வினை இணையதளம் வழியாக மட்டுமே எழுத முடியும். ஆனால், இது தகுதித் தேர்வு கிடையாது.மாணவர்கள் படித்தல், எழுதுதல், பேசுதல் போன்ற எந்தத் திறனில் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டறிய முடியும்.இந்தத் தேர்வினை பள்ளிகள் மூலமாக மட்டுமே எழுத முடியும். இதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி