இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடுவதன் முன்னோட்டமாக, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் விடுபட்டுள்ளன. இதனால், இரண்டு நாட்களாக நடந்த போராட்டத்தை, காலவரையற்ற போராட்டமாக மாற்றி உள்ளனர்.
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை நிர்வகிக்க முடியாமல் திணறும், இ.எஸ்.ஐ., தலைமையகம், கல்லூரிகளை மூடும் நிலைக்கு வந்துள்ளது. புதிய மாணவர் சேர்க்கை இல்லை என அறிவித்ததோடு, மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும், இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்தனர். மத்திய அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காததால், போராட்டத்தை, காலவரையற்ற போராட்டமாக மாற்றினர். மாணவி சவுந்தர்யா கூறுகையில், ''இவ்வளவு பிரச்னை நடந்து வரும் நிலையில், மத்திய அரசு தன் முடிவில் உறுதியாக உள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கான, முதுநிலை மாணவர் சேர்க்கை கல்லூரிகள் பட்டியில், இ.எஸ்.ஐ., கல்லூரிகள் பெயர் இல்லை. எனவே தான் எங்கள் போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக மாற்றி உள்ளோம்,'' என்றார். பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேசினார். ''தடையின்றி தொடர்ந்து கல்வி பெற எல்லா உதவிகளையும் செய்வேன்,'' என, அவர் தெரிவித்தார்.
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை நிர்வகிக்க முடியாமல் திணறும், இ.எஸ்.ஐ., தலைமையகம், கல்லூரிகளை மூடும் நிலைக்கு வந்துள்ளது. புதிய மாணவர் சேர்க்கை இல்லை என அறிவித்ததோடு, மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும், இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்தனர். மத்திய அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காததால், போராட்டத்தை, காலவரையற்ற போராட்டமாக மாற்றினர். மாணவி சவுந்தர்யா கூறுகையில், ''இவ்வளவு பிரச்னை நடந்து வரும் நிலையில், மத்திய அரசு தன் முடிவில் உறுதியாக உள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கான, முதுநிலை மாணவர் சேர்க்கை கல்லூரிகள் பட்டியில், இ.எஸ்.ஐ., கல்லூரிகள் பெயர் இல்லை. எனவே தான் எங்கள் போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக மாற்றி உள்ளோம்,'' என்றார். பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேசினார். ''தடையின்றி தொடர்ந்து கல்வி பெற எல்லா உதவிகளையும் செய்வேன்,'' என, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி