மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்


மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, மொபைல் போன் எண்களை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது.ஆனால், அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலை தொடர்பு எல்லை அல்லது குறிப்பிட்ட மாநிலங்களில்மட்டுமே, இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தற்போது பெற முடிகிறது.

இதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முன்வந்துள்ளது. இதன்படி, நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். வரும் மே 3 முதல், நாடு முழுவதும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது; இதற்காக, டிராய் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி