தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து உறையாற்றி வருகிறார்.தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை, மேலும்

தனிநபர் வருமானவரி விலக்கில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.கருப்புப் பண பதுக்களில் ஈடுபட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது.மேலும் வருமன வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு சிறை. வருமான வரி கட்டாதவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம், தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள் விற்பனைக்கு வெளியிடப்படும். டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் மேலும் செபி அமைப்புடன் எம்சிஎக்ஸ், எப் எம்சிஅமைப்புகள் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி