மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை


மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மாணவர் சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டபோது இறந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த மாவட்டத்திற்கு சுற்றுலா செல்கிறார்களோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.
* மழை அல்லது கடும் வெயில் காலங்களில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டுனர் மது அருந்துபவராக இருக்கக்கூடாது.
* சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பெற்றோரிடம் கூறி அவர்களின் முழு சம்மதத்துடன் அனுமதி கடிதம் பெறுவது அவசியம்.
* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுற்றுலா செல்ல வேண்டும்.

நீர்நிலைக்கு ...

* நீர் நிலைகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.
* கூடிய மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அனைத்து முன்ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டும்.
* இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி