ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2015

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக வீடுகளை வாங்கும்போது அதில் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் என வீட்டின் விலையில் 15 சதவீதம் அளவுக்கு செலவு நீள்வது வழக்கம். இது வீடுவாங்குவோர்க்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதை போக்கவும், நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கவும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குட்ட வீடுகளை வாங்கும்போது அதற்காகும் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் மற்றும் மற்ற டாக்குமண்டேஷன் கட்டணத்தை வாங்கிய வீட்டுக்கடன் விகிதத்திலேயே (LTV (loan to value) ratio) செலுத்தினால் போதுமானது. தற்போது நடைமுறையில், வங்கிகள் இம்மூன்று கட்டணத்தையும் வீட்டின் மதிப்பில் சேர்ப்பதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி