பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு குரூப்-2-ல் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 346 பேருக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய பட்டியலின் வரிசை எண்ணின்படி கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி