அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2015

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.


தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ.41, 215.57 கோடியாகவும், ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ.18,67.86 கோடியாகவும் இருக்கும்.

இது வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம்-ஓய்வூதியம் குறித்த செலவுகள்மொத்த வருவாய்ச் செலவுகளில் 40.65 சதவீதமாகும். அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவினங்களின் காரணமாக, வரும் நிதியாண்டிகளில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 11, 25 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வரும் 2017-18-ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி