விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர்


ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 60 நாட்களில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அதன் பின்னர், அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' இன்று வரை 11 இலட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.புதிய ரேஷன் கார்டு கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு மீதான குறைகள் முகாம்கள் மூலம் உடனடியாக தீர்க்கப்படும்'' என்று காமராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி