ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்கள் 80% தேர்ச்சிபெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்: அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

ஆதிதிராவிட நல பள்ளி மாணவர்கள் 80% தேர்ச்சிபெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்: அமைச்சர்


ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என அமைச்சர் சம்பத் பேசினார்.மாநில அளவிலான மனித நேய விழா கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., விஜயா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் சம்பத் பேசியதாவது:
ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆதி திராவிட மாணவ, மாணவியர்களுக்காக, முதல்வர், 5.11 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு உதவிகளை செய்தும் ஆதிதிராவிட நல மாணவர்கள் தேர்வில் குறைந்த தேர்ச்சி அடைகின்றனர். இந்த ஆண்டு மற்ற பள்ளிகளைப் போல் ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விழாவின் மூலம் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணி பேசியதாவது: பெண்கள் கல்வியில் உயர்ந்தநிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த சைக்கிள் வழங்கும் திட்டம். பொறியியல் கவுன்சிலிங்கில் கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது என அங்கேயே உத்தரவு வழங்குகிறோம். ஜாதி, மோதல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மனிதநேய விழாநடத்தப்படுகிறது. அரசு வழங்கும் இந்த உதவிகளை பெற்று கல்வியில் சிறந்த இடத்தில்உயர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுப்ரமணி பேசினார்.

விழாவில் சேர்மன் குமரன், ஆதிதிராவிடர் அலுவலர் மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழுத்தலைவர் மணிமேகலை பழனிசாமி, ஆர்.டி.ஓ., ஷர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி