வயது வரம்பில் அதிகாரிகளுக்கு சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

வயது வரம்பில் அதிகாரிகளுக்கு சலுகை


மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்வதற்கான, அதிகபட்ச வயது வரம்பு, 56 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது; இந்த நடைமுறை, இந்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மாநில அரசுகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், அனுபவம், செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளில் சேர்த்து கொள்ளப்படுவது வழக்கம். இதற்கான அதிகபட்ச வயது வரம்பு, 54 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மாநில அரசுகளில் பணிஆற்றும் சில அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'மத்திய அரசுபணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் கீழ் பணியாற்றி வரும் அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ப்பதற்கான வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் நல அமைச்சகம் ஆகியவை ஆய்வு செய்து, மாநில அரசு அதிகாரிகளை சேர்த்து கொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, 56 ஆக அதிகரிப்பதாக அறிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி