விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கருவூலங்களில் ஆஜராக உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கருவூலங்களில் ஆஜராக உத்தரவு

மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவோருக்கு நிகழாண்டுக்கான நேர்காணல் ஏப்ரலில் தொடங்கி ஜூன் 15-ம் தேதி வரையில் வங்கி வாரியாக நடைபெற இருக்கிறது. மேலும், ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு வருகிற போது ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், இ.மெயில் முகவரி மற்றும் மறுமணம் புரியா சான்று ஆகியவைகளின் நகல்களுடன் ஆஜராக வேண்டும்.

இதில், பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஏப்.1-ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இதர வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவோர் ஏப்.16-ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் கருவூலத்தில் ஆஜராக வேண்டும். அதைத் தொடர்ந்து மே-1 முதல் 30ம் வரையில் அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் நேரில் ஆஜராக வேண்டும். மேலும், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களை ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த நகல்களில் ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ அந்த ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி