ஏப்ரலில் வங்கிகள் வட்டியை குறைக்கும்: ரகுராம் ராஜன் நம்பிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2015

ஏப்ரலில் வங்கிகள் வட்டியை குறைக்கும்: ரகுராம் ராஜன் நம்பிக்கை

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பலன் ஏப்ரல் மாதம்முதல் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 3 மாதங்களில்2 முறை வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள நிலையில் இதன் பலனாக வங்கிகள் நுகர்வோருக்கான கடன் வட்டியை நிச்சயம் குறைக்கும் என்றும் ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15ம் தேதி கால் சதவிகித வட்டிக் குறைப்பு செய்த நிலையில் 2 வங்கிகள் மட்டுமே அதன் பலனை மக்களுக்கு அளித்தன. தற்போது மீண்டும் ஒரு முறை வட்டிக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பின் பலன் மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும்சென்று சேர்வதில் நடைமுறை சிக்கல்கள் எதுவும் உள்ளதா என்று ரிசர்வ் வங்கி ஆராயும் என்றும் ராஜன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி