ராமநாதபுரத்தில் 'முதுமக்கள் தாழி'பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2015

ராமநாதபுரத்தில் 'முதுமக்கள் தாழி'பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே செங்கமடையில் 3,000 ஆண்டு பழமையான 'பெருங்கற்கால' சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இம்மாவட்டத்தில் முதன் முறையாக 'முதுமக்கள் தாழி' கண்டறியப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி.,1711 முதல் 1725 வரை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு வல்லுனர்களை கொண்டு வட்ட வடிவ கோட்டைகளை கட்டினர். அதில் ஒன்றான கமுதிக்கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொன்று ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 3 கி.மீ.,ல் செங்கமடையில் உள்ளது.

செங்கமடை கோட்டையில் ராமநாதபுரம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஆய்வு செய்தனர். அப்போது 'முதுமக்கள் தாழிகள்', கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளை தாங்கிகள் இருந்தன. 'இது ௩000 ஆண்டுகளுக்கு (பெருங்கற்காலம்) முற்பட்டது' என தொல்லியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இங்கு எடுக்கப்பட்ட கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் ஈமச்சடங்கு சின்னங்கள் என தெரிகிறது. மேலும், குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் 'முதுமக்கள் தாழிகள்' கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இவை கிடைப்பது இதுவே முதன்முறை என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி