வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட்


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 18ம் தேதி பிளஸ்2 கணித தேர்வு நடந்தது. இதில், ஓசூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் மகேந்திரன், கோவிந்தன் என்ற இரண்டு ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர்.
அப்போது தேர்வுக்கு வராத மாணவன் ஒருவனின் கேள்வித்தாளை வாட்ஸ் அப் மூலம் படம் எடுத்து, தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு அனுப்பினர். ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையை, அங்கு சோதனைக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். பள்ளி கண்காணிப்பு கேமராவிலும் ஆசிரியர்களின் நடவடிக்கை பதிவாகியது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாட்ஸ் அப்மூலம் கணக்கு பாட கேள்வித்தாளை அவுட் செய்தது தொடர்பாக இதுவரை ஒரு ஆசிரியர் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. நல்ல விஷயம் தான்

    ReplyDelete
  2. Enna pa eppadi pandrikalepa......

    ReplyDelete
  3. Enna pa eppadi pandrikalepa......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி