தமிழகம் முழுவதும், 43 லட்சம் பெண்கள் உட்பட, 85 லட்சம் பேர்வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பல்வேறு சிக்கல்கள், கவனக் குறைவால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், வேலைவாய்ப்பகங்கள் பட்டியலில், 10 லட்சம் பேர் வரை குறைந்து உள்ளது. புதுப்பிக்க தவறி, பதிவு மூப்பை இழந்து விடுவதால், தகுதியிருந்தும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இது போன்று, 2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம்தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, அரசு சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. விடுபட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணையதளம் வாயிலாகவும் புதுப்பித்து வருகின்றனர். 'அரசின் சிறப்புச் சலுகை முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், புதுப்பிக்கத் தவறியோர் வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்; மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி