பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்


தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துஅரசுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப்பணியில் புதிதாக சேர்பவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 1.4.03 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் சேர்பவர்களுக்கென்று தனி எண் தரப்படும். ஒவ்வொரு மாதமும் கருவூலத்துக்கு அனுப்பும் சம்பள பட்டியலில் இந்த எண் குறிப்பிடப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கும், நம்பரை பெறாதவர்களுக்கும் வரும் மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதுவரை அவர்களது சம்பள பட்டியல் ஏற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு இந்த திட்டத்துக்கான தனி எண் உடனே வழங்கப்பட வேண்டும். இணைபவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான தனியான எண்ணை உடனடியாக வழங்க வேண்டும். இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி