மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?


பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது.தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந் துள்ளது. விடைத்தாள்களின்மதிப்பெண்கள் சிடி மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

மதிப்பெண் பட்டியலை தயாரிக்க தேர்வுத் துறைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள்தேவைப்படும் என்றும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி