கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

துறை அதிகாரிகள்:

தமிழக வாக்காளர் பட்டியலை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம், சமீபத்தில் ஆய்வு செய்ததில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது; பெயர் குழப்பம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி அதிகாரிகளின் உதவியை, தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் மூலம், போலி வாக்காளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

எச்சரிக்கை:

போலி பதிவால் ஏற்படும் சட்ட ரீதியான பின் விளைவுகள் குறித்து, வாக்காளரை எச்சரிக்கை செய்ய, கல்வி துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் வரை கல்லூரி மாணவ, மாணவியரும், பள்ளிகள் திறந்த பின், ஜூலை வரை பள்ளி மாணவ, மாணவியரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி