சார்பதிவாளர் காலியிடங்கள் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

சார்பதிவாளர் காலியிடங்கள் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்

'பதிவுத்துறையில் அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்,' என தமிழ்நாடு பதிவுத்துறை சார்பதிவாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.

மதுரையில் சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: 1975 முதல் 1986 வரையிலான பழைய அட்டவணையை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து மக்களுக்கு சீரிய முறையில் பதிவு விவரங்களை வழங்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். பதிவு ஆவணங்கள் தயார் நிலையில் இருந்த போதும் சிடி மற்றும் ஹாலோகிராபிக் ஸ்டிக்கர்ஸ் இருப்பு இன்மையால் தாமதமாகிறது. எனவே போதிய சிடி மற்றும் ஹாலோகிராபிக் ஸ்டிக்கர்ஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தாத நிலையிலும் பதிவுத்துறை அலுவலர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது பதிவுத்துறை தலைவர்கள் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மதுரையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி