பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை


தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது.
இந்த இரு பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது.இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பொதுத் தேர்வு முடிவுகளும் வியாழக்கிழமைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி