ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2015

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் 30 பேர் தாக்கல் செய்த மனு விவரம்:மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், விரிவுரையாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களில், மூன்றில் ஒரு பங்கு இடத்தை நேரடியாகவும், எஞ்சிய இடங்களை பதவிஉயர்வு மூலமாகவும் நிரப்பவேண்டும். இதன்படி, 51 பணியிடங்கள் மட்டுமே நேரடியாக நியமிக்கப்பட வேண்டும்.இதில், 31 பணியிடங்கள் ஏற்கெனவே நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 20 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யவேண்டிய நிலையில், 34 பணியிடங்களை நேரடியாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதனால், பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 34 பணியிடங்களை நேரடியாக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனு, நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக நியமிக்கப்படும் 34 முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொருத்தே இருக்கும் என்று உத்தரவிட்டார்.மேலும், இந்த மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி