மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா


தேவகோட்டை - ஏப்ரல் -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் 8ம் வகுப்பு மாணவர் ர.நவீன்குமார் வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தங்கினார்.மாநிலஅளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் சார்பாக தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர் முருகன் வழங்கினார்.

இப்போட்டிகளில் 8ம் வகுப்பு மாணவி சொர்ணம்பிகா முதல் பரிசையும் ,அதே வகுப்பை சார்ந்த பவனா இரண்டாம் பரிசையும்,7ம் வகுப்பு மாணவி தனம் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.மாநில அளவில் மத்திய நீர்வாரியம் சார்பாக நடைபெற்ற "நீரை சேமிப்போம் வரும்காலம் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்றஓவிய போட்டியில் கலந்துகொண்டோருக்கான சான்றிதழ்களை பெற்றோர் சார்பாக சித்ரா வழங்கி பள்ளியை பற்றி பேசினார்.இப்போட்டிகளில் 8ம் வகுப்பு மாணவி மங்கையர்க்கரசி முதல் பரிசையும் ,7ம் வகுப்பு மாணவி தனம் இரண்டாம் பரிசையும்,8ம் வகுப்பு மாணவி பூஜா மூன்றாம் பரிசையும்,மொத்தத்தில் போட்டியில்கலந்துகொண்ட மாணவியர் அனைவருக்கும் சுமார் 80 மாணவ,மாணவியர்க்கு மத்திய அரசின் பங்கேற்பு சான்றிதள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலெட்சுமி செய்திருந்தார்.விழாவின் நிறைவாக 8ம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி