தேர்வு முடிவு வெளியிடப்படும் காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பிளஸ் 2,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
சென்னையில் ஆண்டுதோறும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான சில நாள்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
பெண் போலீஸார், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர். பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களின்உதவியோடு இந்த வகுப்புகளை போலீஸார் நடத்தி வருகின்றனர்.இந்தக் கலந்தாய்வில், மாணவர்களிடம் தேர்வு முடிவு குறித்த பயத்தை அகற்றுவது, தேர்ச்சி பெற்றாலும், தேர்ச்சி பெறாவிட்டாலும் அதை மனப்பக்குவத்துடன் கையாள்வது, குறித்து மாணவர்களிடம் கூறுவதாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி