தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகதமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கி.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் சி.ராமநாதன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 7 நாள்களாக வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களைநடத்தி வந்தனர். இந்த நிலையில், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதியுடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சத்துணவுஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி