வங்கிகள் மூலம் சுலப தவணை திட்டத்தில் டூவீலர், கம்ப்யூட்டர், கார் வாங்க விரும்பும் போலீஸ் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.1500 வரை குறைந்த வட்டியுடன் சுலபமாக தவணையை செலுத்தும் திட்டத்தை வங்கிகள் வழங்கி உள்ளன. இந்தாண்டுக்கான டூவீலர், கம்ப்யூட்டர், கார் வாங்க விரும்புவோரின் விண்ணப்பங்களை மே 15க்குள் தர வேண்டும். முன்பணம் பெற தகுதி: ஊழியர் கோடு எண், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், கடன் வாங்கும் பொருளின் விலைப்புள்ளி (அசல் மற்றும் நகல்), எம்.ஐ.சி.ஆர்., எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், குறைந்த பட்சம் பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஓய்வு பெற ஐந்தாண்டுகள் இருக்க வேண்டும். முன் பணத்தை சரண்டர் செய்யக்கூடாது. டி.எஸ்.பி.,/உதவிகமிஷனரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து எஸ்.பி.,/ கமிஷனருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி