கோடைக் கால விடுமுறை வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

கோடைக் கால விடுமுறை வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் நியமனம்


கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் பொன்.கலையரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

சென்னை உயர் நீதிமன்றத்துக்கான கோடை கால விடுமுறையில் வழக்கு விசாரணைக்கான நீதிபதி அமர்வுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன (மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை).அதில், மே 1 முதல் 10-ஆம் தேதி வரை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எஸ்.மணிக்குமார் ஆகியோர் தலைமையில் அமர்வு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெறும்.அதன் பிறகு இருவரும் தனியாக வழக்குகளை விசாரணை செய்வர். நீதிபதி எஸ்.விமலா குற்றவியல் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வார்.

மே 11 முதல் 17-ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கே.ரவிச்சந்திரபாபு, ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வர்.மே 18 முதல் மே 24-ஆம் தேதி வரை நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.மகாதேவேன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.மே 25 முதல் மே 31-ஆம் தேதி வரை நீதிபதிகள் வி.தனபலான், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி பி.தேவதாஸ் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.மேலும், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை மனு தாக்கலும், புதன்கிழமை, வியாழக்கிழமைவழக்கு விசாரணைகளும் நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி