104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர்.மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களே அதிக அளவில் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து 104 சேவை அதிகாரிகள் கூறியது:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் இருந்தே அழைப்புகள் வரத் தொடங்கின. பிளஸ் 2 மாணவர்களை விட பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் அழைத்தனர். பெரும்பாலான அழைப்புகள் மாணவர்களிடம் இருந்து வந்தன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,தேர்வு சமயத்தில் கவனம் படிப்பில் செலுத்தவில்லை, தற்கொலை எண்ணம், மனஅழுத்தம்உள்ளிட்ட காரணங்களுக்காக அதிக அழைப்புகள் வந்தன. வியாழக்கிழமை சுமார் 7,500 அழைப்புகள் வந்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர். எதிர்பார்த்த தேர்வு முடிவுகளைப் பெறாத 19 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி