2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு,
15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள்உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம், 35,667 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். இதில், 31,332 பேரின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு 30,380 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு 28,053 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட3,279 விண்ணப்பங்கள் அதிகம்.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''தபாலில் அனுப்பிய விண்ணப்பங்கள், தாமதமாக நாளை (இன்று) கிடைக்கவாய்ப்புள்ளது. அதை சேர்க்க ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது கலந்தாய்வின் போது தான் தெரிய வரும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி